ராமேஸ்வரம் மீனவர்களை விரட்டிய இலங்கை கடற்படை! – மீனவர்கள் புகார்!

செவ்வாய், 11 ஜனவரி 2022 (08:38 IST)
ராமேஸ்வரம் பகுதியை சேர்ந்த மீனவர்களை இலங்கை கடற்படை தாக்கி விரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்திலிருந்து வங்க கடலில் மீன்பிடிக்க செல்லும் மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்குவதும், கைது செய்வது பல ஆண்டுகளாக பெரும் பிரச்சினையாக தொடர்ந்து வருகிறது.

இந்நிலையில் இன்று ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் கச்சத்தீவு அருகே கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்துள்ளனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை விரட்டியடித்துள்ளனர்.

பாட்டில்களையும், கற்களையும் வீசி தங்களை இலங்கை கடற்படையினர் தங்களை தாக்கியதோடு தங்கள் வலைகளையும் அறுத்து சேதப்படுத்தியதாக மீனவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்