7 பேர் விடுதலை விவகாரம்: சட்ட ரீதியாக ஆலோசிக்கப்பட்ட பிறகே அடுத்த கட்ட நடவடிக்கை!

வெள்ளி, 5 பிப்ரவரி 2021 (10:56 IST)
பேரறிவாளன் உள்பட 7பேர் விடுதலை செய்ய தமிழக அரசு அளித்த பரிந்துரை நிராகரிப்பு குறித்து அமைச்சர் சி.வி. சண்முகம் கருத்து. 
 
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று வரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை செய்ய குடியரசுத் தலைவருக்கே அதிகாரமுள்ளது என ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்து, தமிழக அரசு அளித்த பரிந்துரையை 2 ஆண்டுகள் கழித்து நிராகரித்துள்ளார்.
 
இந்நிலையில் தற்போது இந்த விவகாரம் குறித்து அமைச்சர் சி.வி. சண்முகம், 7 பேர் விடுதலையில் சட்ட ரீதியாக ஆலோசிக்கப்பட்ட பிறகே அடுத்த கட்ட நடவடிக்கை  எடுக்கப்படும் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்