நெல்லை ஆணவக்கொலை வழக்கில் உயிரிழந்த கவின் காதலித்ததாக கூறப்படும் சுபாஷினி, வெளியிட்டுள்ள வீடியோவில், "தேவையில்லாமல் எங்களைப் பற்றி வதந்திகளை கிளப்ப வேண்டாம், இத்துடன் இந்த பிரச்சனையை விட்டு விடுங்கள்" என்று அவர் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
நானும் கவினும் காதலித்தது உண்மைதான், ஆனால், அதே நேரத்தில் நாங்கள் செட்டில் ஆக வேண்டும், ஆறு மாதம் கழித்து நம்முடைய காதலை பற்றி பெற்றோரிடம் பேசுவோம் என்று கவின் கூறியிருந்தார்."
சம்பவத்தன்று கவினின் தாத்தாவுக்கு சிகிச்சை அளிக்க கவினுடன் அவரது அம்மாவும், மாமாவும் வந்திருந்தார்கள். நான் சிகிச்சை பற்றி மட்டுமே பேசிக் கொண்டிருந்தேன். அப்போது கவின் திடீரென வெளியே சென்றுவிட்டான். அதன் பிறகு என்ன நடந்தது என்று எங்களுக்குத் தெரியாது."
கவின் காதலி சுபாஷினி வெளியிட்டுள்ள இந்த வீடியோ, நெல்லை ஆணவக்கொலை வழக்கில் மேலும் பல கேள்விகளை எழுப்பியுள்ளதுடன், இணையத்தில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.