தமிழகத்தில் சில நாட்களாக மழை பெய்து வருகிறது என்பதும், கேரளாவில் பெய்து வரும் பருவமழையின் தாக்கம் தமிழகத்தில் உள்ள சில மாவட்டங்களிலும் உள்ளது என்பதையும் பார்த்து வருகிறோம். அது மட்டும் இன்றி, காற்றின் திசை மாறுபாடு காரணமாகவும், தமிழகத்தின் சில பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், தென்காசி, தேனி, கோவை மற்றும் திருநெல்வேலி ஆகிய பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்றும், புதுச்சேரியிலும் மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையைப் பொருத்தவரை, வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், மாலை நேரத்தில் மழை பெய்யும் என்றும் கூறப்படுகிறது.