இன்று காலை 10 மணிக்குள் 7 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை: வானிலை எச்சரிக்கை..!

Siva

செவ்வாய், 10 ஜூன் 2025 (07:57 IST)
இன்று காலை 10 மணிக்குள், தமிழகத்தில் உள்ள 7 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
தமிழகத்தில் சில நாட்களாக மழை பெய்து வருகிறது என்பதும், கேரளாவில் பெய்து வரும்  பருவமழையின் தாக்கம் தமிழகத்தில் உள்ள சில மாவட்டங்களிலும் உள்ளது என்பதையும் பார்த்து வருகிறோம். அது மட்டும் இன்றி, காற்றின் திசை மாறுபாடு காரணமாகவும், தமிழகத்தின் சில பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
 
இந்த நிலையில், இன்று காலை 10 மணிக்குள் தமிழகத்தில் உள்ள ஏழு மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
 
வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், தென்காசி, தேனி, கோவை மற்றும் திருநெல்வேலி ஆகிய பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்றும், புதுச்சேரியிலும் மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இதனை அடுத்து, மேற்கண்ட ஏழு மாவட்டங்களில் உள்ளவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.
 
சென்னையைப் பொருத்தவரை, வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், மாலை நேரத்தில் மழை பெய்யும் என்றும் கூறப்படுகிறது.
 
நேற்று சென்னையில் நல்ல வெயிலுக்கு பிறகு மழை பெய்த நிலையில், அந்த மழை இன்னும் சில நாட்களுக்கு தொடரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்