இன்று இரவு 30 மாவட்டங்களில் கனமழை: வானிலை எச்சரிக்கை..!

Siva

ஞாயிறு, 18 மே 2025 (18:04 IST)
தமிழகத்தில், ஒரு பக்கம் அக்னி நட்சத்திர வெயில் கொளுத்திக் கொண்டிருந்தாலும், இன்னொரு பக்கம் மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.
 
அந்த வகையில், இன்று தமிழகத்தில் உள்ள 30 மாவட்டங்களில் மிதமான மழை முதல் கன மழை வரைக்கும் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, தென்காசி, தேனி ஆகிய பகுதிகளில் மிதமான மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
சென்னை, விழுப்புரம், நீலகிரி, கோவை, திருப்பூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், அரியலூர், பெரம்பலூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், ராமநாதபுரம், நாகப்பட்டினம், திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய பகுதிகளிலும் மிதமான மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்