அடுத்த 3 மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் மழை

சனி, 18 நவம்பர் 2023 (19:55 IST)
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வரும் நிலையில், இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து வருகிறது.

இந்த  நிலையில் தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில்  15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளதாவது:

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை, செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, காஞ்சிபுரம், திருவள்ளூர், ஆகிய 15  மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்