10 மணிக்கு முதல் சம்பளம்.. 10.05க்கு ராஜினாமா.. HR ஒருவரின் வேதனை பதிவு..!

Siva

திங்கள், 11 ஆகஸ்ட் 2025 (12:32 IST)
சமீபத்தில் ஒரு முன்னணி நிறுவனத்தில் நடந்த சம்பவம், பணியாளர் மற்றும் நிறுவனங்களுக்கு இடையேயான உறவில் ஏற்பட்டுள்ள விரிசலை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. ஒரு மாதம் மட்டுமே பணிபுரிந்த ஊழியர் ஒருவர், தனது முதல் சம்பளத்தை பெற்ற ஐந்து நிமிடங்களிலேயே ராஜினாமா செய்துள்ளார்.
 
காலை 10 மணிக்கு அவரது வங்கிக் கணக்கிற்கு சம்பளம் வரவு வைக்கப்பட்ட நிலையில், சரியாக 10:05 மணிக்கு அவர் தனது ராஜினாமா கடிதத்தை மின்னஞ்சல் மூலம் அனுப்பிவிட்டு, யாருக்கும் சொல்லாமல் வெளியேறிவிட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் நிறுவனத்தின் மனிதவளத் துறை அதிகாரியை வேதனையில் ஆழ்த்தியுள்ளது. அவர் தனது ஆதங்கத்தை, "இது நியாயமா?" என்ற தலைப்புடன் லிங்க்ட்இன் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
 
இதுபோன்ற திடீர் ராஜினாமாக்கள், நிறுவனத்திற்கு பெரும் இழப்பையும், பணியாளர் நியமனம் மற்றும் பயிற்சிக்கு செலவிடப்பட்ட நேரத்தையும், வளங்களையும் வீணாக்குகின்றன. ஒரு ஊழியர் நிறுவனத்தில் சேரும்போது, நீண்டகால பணிக்கு உறுதிமொழி அளிக்கிறார். ஆனால், முதல் சம்பளம் பெற்ற உடனேயே அவர் வெளியேறுவது, தொழில்முறை நெறிமுறைகளை மீறுவதாக கருதப்படுகிறது.
 
இந்தச் சம்பவம், பணியாளர்களை தக்கவைத்துக்கொள்வதற்கான சவாலை நிறுவனங்களுக்கு உணர்த்துகிறது. பணியாளர்களுக்கு சிறந்த பணிச்சூழல், சரியான ஊதியம் மற்றும் அங்கீகாரம் அளிப்பதன் மூலம் மட்டுமே, இத்தகைய சம்பவங்களைத் தவிர்க்க முடியும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர். 
 
Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்