தமிழகத்தின் 30 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

Siva

திங்கள், 8 ஜனவரி 2024 (07:11 IST)
தமிழகத்தில் இன்று சென்னை உள்பட 30 மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை வர பெய்யும் என வானிலை ஆய்வு மையம் சற்றுமுன் அறிக்கை வெளியிட்டுள்ளது. 
 
கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் சென்னையில் நேற்று இரவு முதல் தொடர் மழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் சில மாவட்டங்களுக்கு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறையும் அளிக்கப்பட்டுள்ளது. 
 
இந்த நிலையில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், ஆகிய மாவட்டங்களில் இன்று மிதமான மழை பெய்யும் என்றும் கடலூர், விழுப்புரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, தஞ்சாவூர், புதுக்கோட்டை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி,  கள்ளக்குறிச்சி, வேலூர், பெரம்பலூர், நாமக்கல், சேலம், கரூர், புதுக்கோட்டை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர்,  திருப்பூர், தேனி, தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம் ஆகிய பகுதிகளில் லேசான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்