மெரினா கடற்கரையில் பொதுமக்கள் செல்ல தடை- மாநகராட்சி அறிவிப்பு

Webdunia
சனி, 1 ஜனவரி 2022 (21:55 IST)
தென்னாப்பிரிக்காவில் இருந்து உலக நாடுகளுக்குக் கொரொனா தொற்று பரவி வருகிறது. இந்தியாவில் இதுவரை 400க்கும் மேற்பட்டவர்கள் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.ஏற்கனவே கொரொனா இரண்டாம் அலை தீவிரமாகப் பரவி வரும் நிலையில் இத்தொற்றைக் குறைக்க மாநில அரசுகளுடன் இணைந்து மத்திய அரசு தீவிரமாகப் பணியாற்றி வருகிறது.

 இந்நிலையில் ஜனவரி 10 ஆம் தேதி வரை கொரானா கட்டுபபடுகளை முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில் சென்னையில் கடற்கரையில் நாளை முதல் பொதுமக்களுக்கு தடை விதித்து  மாநகராட்சி நிர்வாகம்  உத்தரவிட்டுள்ளது.

இங்குள்ள பிரத்யேக நடைபாதையில் மாற்றுத் திறனாளிகளுக்கு அனுமதி  எனவும் நடைபயிற்சி செல்வோருக்கு மட்டும் அனுமதி எனவும் தெரிவித்துள்ளது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்