விரைவில் பிடிஆரின் மூன்றாவது ஆடியோவா? சமூக வலைத்தளங்களில் பரவும் வதந்தி..!

புதன், 10 மே 2023 (19:30 IST)
தமிழக நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அவர்களின் பேசியதாக இரண்டு ஆடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் அவரது நிதி அமைச்சர் பதவி மாற்றப்படும் என்றும் கூறப்பட்டு வருகிறது. 
 
இந்த நிலையில் பிடிஆர் பேசியதாக கூறப்படும் மூன்றாவது ஆடியோ விரைவில் வெளியாக இருப்பதாகவும் இந்த ஆடியோவில் முதலமைச்சர் குடும்பத்தின் முக்கிய நபர் குறித்த அதிர்ச்சி தகவல் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. 
 
ஏற்கனவே வெளியான இரண்டு ஆடியோவுக்கே திமுகவினர் பதில் சொல்ல முடியாமல் திணறிக் கொண்டிருக்கும் நிலையில் மூன்றாவது ஆடியோ வெளியானால் என்ன ஆகும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
 
ஆனால் இது முழுக்க முழுக்க வதந்தி என்றும் சமூக வலைதளங்களில் வேண்டும் என்று வதந்தி பரப்பப்படுகிறது என்றும் பிடிஆரின் அடுத்த ஆடியோ வெளிவர வாய்ப்பே இல்லை என்றும் திமுகவினர் கூறி வருகின்றனர்.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்