இன்று காலை நடந்த 'ஜன்சுன்வாய்' கூட்டத்தின்போது, ஒரு புகார்தாரர் போல் காட்டிகொண்ட சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஒரு நபர் முதலமைச்சரை அருகே சென்று அவரை தாக்கியுள்ளார். முதலமைச்சரின் பாதுகாப்பு படையினர் உடனடியாக அந்த நபரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.
இந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள், அந்த நபர் சில ஆவணங்களுடன் வந்து முதலமைச்சரிடம் பேசிக்கொண்டிருந்தபோது, திடீரென அவரை தாக்கியதாக தெரிவித்தனர்.