கணவனின் செயலால் கர்ப்பிணி தூக்கிட்டு தற்கொலை!

செவ்வாய், 12 அக்டோபர் 2021 (14:41 IST)
ராணிப்பேட்டை மாவட்டம் கொடைக்கல் கிராமத்தில் வசித்து வருபவர் செல்வகுமார் (38) இவரது மனைவி ஈஸ்வரி (30) இந்த தம்பதிக்கு  5 வயதில் ஒரு மகளும், 3 வயதில் ஒரு மகனும் உள்ளனர். மூன்றாவதாக கர்ப்பமான ஈஸ்வரியின் கணவர் குடி பழக்கத்திற்கு அடிமையாகி வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்ததாக கூறப்படுகிறது. 
 
இதனால் அடிக்கடி கணவருடன் சண்டையிட்டு மனமுடைந்த அவர் வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள கொண்டபாளையம் போலீசார் ஈஸ்வரியின் சடலத்தை மீட்டு சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தரக்கொலை செய்துக்கொண்டுள்ள சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்