பிரணவ் ஜுவல்லரி உரிமையாளரின் மனைவி கார்த்திகா கைது.. ரூ.100 கோடி மோசடி வழக்கு..!

வியாழன், 14 டிசம்பர் 2023 (16:59 IST)
ரூபாய் 100 கோடிக்கு மேல் மோசடி செய்ததாக கூறப்பட்ட பிரணவ் ஜுவல்லரி உரிமையாளர் மதன் செல்வராஜ் என்பவர் ஏற்கனவே சரண் அடைந்துள்ள நிலையில் தற்போது அவருடைய மனைவி கார்த்திகா என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். 
 
சட்ட விரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக பிரணவ் ஜுவல்லரி  மீது அமலாக்க துறையினர் வழக்கு பதிவு செய்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் அந்த கடைக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை நடந்தது. இதில் கிலோ கணக்கில் நகை ரொக்கம் மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்பட்டது. 
 
இந்த நிலையில் பிரணவ் ஜுவல்லரி  உரிமையாளர் மதன் செல்வராஜ் மற்றும் அவரது மனைவி கார்த்திகா மீது வழக்கு பதிவு செய்திருந்த நிலையில் இருவரும் தலைமறைவாகினார். 
 
சமீபத்தில் பிரணவ் ஜுவல்லரி உரிமையாளர் மதன் செல்வராஜ் நீதிமன்றத்தில் சரணடைந்தார். இதனை அடுத்து அவரது மனைவி கார்த்திகாவும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்