’வேதனை’ - மீண்டும் சிறை செல்ல இருக்கும் சேலத்தின் நாயகன்

Webdunia
ஞாயிறு, 21 ஆகஸ்ட் 2016 (13:32 IST)
சேலம், முள்வாடி கேட் பகுதியில் ரயில்வே மேம்பாலம் கட்டும் பணியை தடுத்ததாக கைது செய்யப்பட்டு, சேலம், சிறையில் அடைக்கப்பட்டவர் சமூகசேவகர் பியூஸ்மானுஷ்.


 


தற்போது, அவர் நிபந்தனை ஜாமீனில் வெளியில் இருக்கிறார். இந்நிலையில், சேலத்தில் அரசு நிலத்தை புகைப்படம் எடுத்த விவகாரத்தில், விஸ்வநாதன் என்பவரை, பியூஸ்மானுஷ் தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதை தொடர்ந்து, விஸ்வநாதன், பியூஸ்மானுஷ் மீது காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

இதை அடுத்து, காவல்துறையினர் பியூஸ்மானுஷ் மீது நான்கு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனால், பியூஸ்மானுஷுக்கு வழங்கப்பட்ட நிபந்தனை ஜாமீன் ரத்து செய்யப்பட்டு,  விரைவில் அவர் கைது செய்யபடலாம் என கூறப்படுகிறது.

முள்வாடி கேட் பிரச்சனையிலேயே,  பியூஸ்மானுஷை காவல்துறையினர், சிறையில் வைத்து அடித்து உதைத்ததை ஊடகத்தில் போட்டு உடைத்ததால், மீண்டும் அவர் சிறைக்கு, சென்றால், அவரின் நிலை என்னவாகும் என அவரின் ஆதரவாளர்கள் அச்சப்படுகின்றனர்.
அடுத்த கட்டுரையில்