கோயில் ஊழியர்களுக்கு பணி நிரந்தரம்- அமைச்சர் தகவல்

வியாழன், 1 ஜூலை 2021 (19:17 IST)
சமீபத்தில் நடைபெற்ற சட்டபேரவைத் தேர்தலில் முக.ஸ்டாலின் தலைமையிலான திமுக பெரும்பான்மையாக இடங்களைப் பெற்று ஆட்சி அமைத்துள்ளது.

ஸ்டாலின் முதல்வராகப் பதவியேற்று 50 நாட்களை நெருங்கும் நிலையில், அதிமுகவினர் உள்ளிட்ட பல விமர்சனங்களை முன்வைத்து வருகிறது.,

இந்நிலையில் இன்று அமைச்சர் சேகர் பாபு ஒரு முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதில், தமிழகத்தில் உள்ள கோயில்களில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக ஊழியர்களாக உள்ளோர் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு கோயில் ஊழியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்