பாறாங்கல்லை கார் மீது போட்ட மக்கள் – ஏன் தெரியுமா ?

ஞாயிறு, 17 நவம்பர் 2019 (14:55 IST)
ஈரோடு மாவட்டத்தில் விபத்து ஏற்படுத்தி இருவரை படுகாயமடைய வைத்த வாடகை கார் ஓட்டுனரை உறவினர்கள் தாக்கியுள்ளனர்.

ஈரோடு மாவட்டம் பவானி அருகே நரிப்பள்ளம் என்ற பகுதியில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த இருவர் மீது வாடகைக் கார் ஒன்று மோதியதை அடுத்து இருவரும் பலத்த காயம் அடைந்தனர். தகவலறிந்து உடனடியாக வந்த 108 வாகனம் இருவரையும் ஏற்றுச்சென்று மருத்துவமனையில் அனுமதித்தது.

இதையடுத்து அந்த இடத்துக்கு வந்த அடிபட்டவர்களின் உறவினர்கள் கார் ஓட்டுனரை தாக்கினர். பின்னர் காரின் மேல் பாறாங்கல்லைப் போட்டு சேதப்படுத்தினர். அந்த இடத்துக்கு வந்த போலிஸார் டிரைவரை அவர்களிடம் இருந்து காப்பாற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்