மோடி அரசின் பேடி அரசுதான் எடப்பாடி அரசு: பழ.கருப்பையா விளாசல்!

சனி, 29 ஜூலை 2017 (15:21 IST)
திமுகவின் மனித சங்கிலி போராட்டத்தில் கலந்து கொண்ட பழ.கருப்பையா பிரபல தமிழ் வார இதழின் இணையத்துக்கு அளித்த பேட்டியில் நீட் விவகாரத்தில் தமிழக அரசையும், மத்திய அரசையும் கடுமையாக சாடினார்.


 
 
மாநில அரசின் உரிமைய மத்திய அரசு பறிக்கிறது. உரிமைக்காக எதிர்த்து நின்று போராட வேண்டிய இடத்தில் எடப்பாடி பழனிச்சாமி அவர்களிடம் போய் கையேந்தி நிற்கிறார் என பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.
 
மேலும் பேசும் போது, எடப்பாடி அரசு ஒரு பேடி அரசாக செயல்படுகிறது. மோடி அரசுக்கு வாய்த்திருக்கிற ஒரு பேடி அரசு. தன் உணர்வோடு, மனத்தெம்போடு தமிழக மக்களின், மாணவர்களின் கல்வியை காக்க வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு இருக்கிறது.
 
அப்படி இருக்காவிட்டால் பொறியியல் கல்லூரிகளுக்கும் நீட் தேர்வினை கொண்டுவருவார்கள். எல்லா கல்வி நிலையங்களிலும் நீட் தேர்வு வந்துவிடுமானால் நமக்கு கல்வி அமைச்சரே தேவையில்லை என்ற நிலை வரும் என்றார் பழ.கருப்பையா.

வெப்துனியாவைப் படிக்கவும்