முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாயார் காலமானார்!

சனி, 25 பிப்ரவரி 2023 (05:55 IST)
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாயார் பழனியம்மாள் காலமானார். அவருக்கு வயது 96. வயது மூப்பு காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். 
 
சிகிச்சை பலனளிக்காததால் அவரது உடல்நிலை மோசமானது. இதையடுத்து அவர் பெரியகுளத்தில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டார். இந்நிலையில் நேற்று இரவு பழனியம்மாளின் உயிர் பிரிந்தது. இதையடுத்து ஓ.பன்னீர்செல்வம் சென்னையில் இருந்து பெரியகுளம் விரைந்து வந்து கண்ணீருடன் அம்மாவுக்கு அஞ்சலி செலுத்தினார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்