வயல்வெளியில் மர்மமாக கொலை செய்யப்பட்ட 70 வயது மூதாட்டி

வெள்ளி, 2 பிப்ரவரி 2018 (04:38 IST)
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ளது தொட்டியம்பட்டி என்ற கிராமத்தை சேர்ந்த வெள்ளச்சி என்ற 70 வயது மூதாட்டி நேற்று வயல்வெளியில் கழுத்தறுபட்டு மர்மமான முறையில் இறந்து கிடந்தது அந்த பகுதியினர் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெள்ளச்சி வயல்வெளி மேடுகளில் விளைந்துக்கிடக்கும் விளக்குமாறு தோகையை அறுத்து சேகரித்து, அதை துடைப்பாக செய்து விற்பனை செய்து வரும் இந்த மூதாட்டி வழக்கம்போல் நேற்று காலையில் தோகை சேகரிக்க சென்றுள்ளார். இந்த நிலையில் தான் அவர் தோகை அறுக்கும் அரிவாளாலே வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார்.

அவரிடம் பணம் மற்றும் நகை எதுவும் இல்லாத நிலையில் கொலை செய்யப்பட்டிருப்பதால் இது முன்விரோதம் காரணமாக நடந்த கொலையாக இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். ஆனால் தங்களுக்கு யாரும் எதிரிகள் கிடையாது என்றும், தெரிந்தவர்கள் கொலை செய்திருக்க வாய்ப்பில்லை என்றும் அவரது கணவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்