ஒரே நேரத்தில் இரண்டு காற்றழுத்த தாழ்வு பகுதிகள்! – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

திங்கள், 29 நவம்பர் 2021 (12:08 IST)
வங்க கடலில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக உள்ள நிலையில் மேலும் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த சில வாரங்களாக தமிழகம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது, இதனால் பல மாவட்டங்களில் குடியிருப்புகள், விவசாய நிலங்கள் நீரில் மூழ்கியுள்ள நிலையில் பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நாளை வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேசமயம் தொடர்ந்து டிசம்பர் 1ம் தேதி அரபிக்கடலிலும் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக உள்ளதாக தற்போது இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஒரே சமயத்தில் அரபிக்கடல் மற்றும் வங்க கடலில் உருவாகும் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதிகளால் மழை பொழிவு அதிகரிக்கும் என கூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்