இன்று தொடங்கிய 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 43 ஆயிரம்மாணவர்கள் ஆப்சென்ட்

செவ்வாய், 10 மே 2022 (17:57 IST)
இன்று தொடங்கிய 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 43,533 மாணவர்கள் பங்கேற்கவில்லை என தேர்வுத்துறை அறிவித்துள்ளது 
 
இன்று முதல் தொடங்கிய 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் பங்கேற்க 8 லட்சத்து 85 ஆயிரத்து 53 பேர் மாணவர்கள் பதிவு செய்திருந்தனர். ஆனால் அதில் 43 ஆயிரத்து 553 மாணவர்கள் பங்கேற்கவில்லை என தேர்வுத்துறை தெரிவித்துள்ளது
 
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பொதுத்தேர்வுகள் நடத்தப்படாத நிலையில் இந்த ஆண்டு திடீரென முதன்முதலாக பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் அச்சம் காரணமாக தேர்வில் பங்கேற்காமல் இருந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது 
 
இருப்பினும் இது குறித்து ஆய்வு செய்து தேர்வில் பங்கேற்காத மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்றும் அவர்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுக்க ஆலோசனை செய்யப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்