தமிழ்நாட்டில் இன்று 8 நகரங்களில் அதிகபட்ச வெப்பம்.. இன்னும் அதிகரிக்கும் என தகவல்..!

வெள்ளி, 12 மே 2023 (19:37 IST)
தமிழ்நாட்டில் இன்று எட்டு நகரங்களில் அதிகபட்ச வெயில் அடித்ததை அடுத்து வெப்பம் இன்னும் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
 
தமிழகத்தில் இன்று சென்னை வேலூர் ஆகிய இரண்டு நகரங்களில் 100 டிகிரிக்கும் அதிகமாக வெப்பம் இருந்ததாகவும் அதே போல் ஈரோடு பரங்கிப்பேட்டை கடலூர் திருச்சி காரைக்கால் சேலம் ஆகிய பகுதிகளில் 90 முதல் 99 டிகிரி வரை வெப்பம் பதிவு செய்ததாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
கொடைக்கானல் ஊட்டி குன்னூர் ஆகிய பகுதிகளில் கூட 70 டிகிரிக்கும் மேல் வெப்பம் பதிவானதாகவும் வால்பாறைகள் 82 டிகிரி வெப்பம் பதிவானதாகவும் கூறப்பட்டுள்ளது 
 
 அக்னி நட்சத்திர வெயில் தற்போது உச்சகட்டத்தில் இருப்பதால் வரும் நாட்களில் இன்னும் வெப்பம் அதிகரிக்கும் என்று கூறப்படுவது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்