ஊரடங்கிற்கு விரைவில் முற்றுப்புள்ளி – மு.க.ஸ்டாலின் தகவல்!

செவ்வாய், 1 ஜூன் 2021 (08:12 IST)
தமிழகத்தில் கொரோனா பரவலால் அமல்படுத்தப்பட்டுள்ள முழு ஊரடங்கிற்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை பரவல் அதிகரித்துள்ள நிலையில் மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதேசமயம் மக்களுக்கு தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில் ஊரடங்கு குறித்து பேசியுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் “தமிழகத்தில் முழு ஊரடங்கினால் கொரோனா தொற்று வேகமாக குறைந்து வருகிறது. தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நீண்ட காலத்திற்கு ஊரடங்கி நீடித்து செல்ல முடியாது. ஊரடங்கினால் பல்வேறு மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது உண்மைதான். விரைவில் ஊரடங்குக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். அதேசமயம் மக்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி கொரோனா பரவலுக்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்” என கேட்டுக் கொண்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்