தமிழகத்தில் குட்கா பொருட்களுக்கு முற்றிலும் தடை – மு.க.ஸ்டாலின் உறுதி!

செவ்வாய், 31 ஆகஸ்ட் 2021 (10:23 IST)
தமிழகத்தில் குட்கா பொருட்கள் விற்பனையை தடுக்க நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இன்று நடைபெற்று வரும் சட்டமன்ற கூட்டத்தில் பேசிய ஜி.கே.மணி தமிழகத்தில் குட்கா பொருட்களை தடை செய்வதற்கான நடவடிக்கை குறித்து கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த முதல்வர் மு.க.ஸ்டாலின் “குட்கா பொருட்கள் விற்பதை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படுகிறது. பள்ளி கல்லூரிகள் அருகே போதைப் பொருள் விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும், இதற்காக புதிய சட்டம் விரைவில் கொண்டு வரப்படும். குட்கா விற்பனை முற்றிலும் தடுக்கப்படும்” என்று கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்