மகளையே வன்கொடுமை செய்த தந்தை; உடந்தையாக இருந்த சித்தி! – செங்கல்பட்டில் அதிர்ச்சி சம்பவம்!

செவ்வாய், 31 ஆகஸ்ட் 2021 (10:12 IST)
செங்கல்பட்டில் மகளை தந்தையே பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மெரினா கடற்கரையில் சோகமாக அமர்ந்திருந்த 14 வயது சிறுமி ஒருவரை கண்ட போலீஸார் அவரை விசாரித்துள்ளனர். ஆனால் அவர் எதுவும் பேசாததால் புதுவண்ணாரப்பேட்டையில் உள்ள காப்பகத்தில் சிறுமியை ஒப்படைத்துள்ளனர். அங்கும் சிறுமி எதுவும் சாப்பிடாமல் இருந்ததால் அங்குள்ளவர் சிறுமியை விசாரித்துள்ளனர்.

அப்போது சிறுமி செங்கல்பட்டை சேர்ந்தவர் என்பது அவரது தந்தை குமார் அவருக்கு குளிர்பானத்தில் மதுவை ஊற்றி கொடுத்து அடிக்கடி பாலியல் வன்கொடுமை செய்ததும் தெரிய வந்துள்ளது. இதுகுறித்து குழந்தைகள் நல ஆணையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் அவர்கள் புகாரின் பேரில் குமார் மற்றும் அவருக்கு உடந்தையாக செயல்பட்ட அவரது இரண்டாவது மனைவி கஸ்தூரி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்