தமிழகத்தில் கரும்பூஞ்சை தொற்று; மருந்து வாங்க நிதி! – முதல்வர் உத்தரவு!

திங்கள், 7 ஜூன் 2021 (13:12 IST)
தமிழகத்தில் கரும்பூஞ்சை தொற்று அதிகரித்து வரும் நிலையில் தேவையான மருந்துகளை வாங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் நிதி ஒதுக்கி உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் கரும்பூஞ்சை தொற்று பரவல் அதிகரித்துள்ள நிலையில் தடுப்பு நடவடிக்கைகளில் தமிழக அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. கரும்பூஞ்சை தொற்று பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனைகளில் சிறப்பு படுக்கைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் தமிழகத்திற்கு கரும்பூஞ்சை தொற்றுக்கு தேவையான மருந்துகளை வாங்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ரூ.25 கோடி நிதி ஒதுக்கி உத்தரவிட்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்