வெற்றி துரைசாமியின் செல்போன் கண்டெடுக்கப்பட்டுள்ளது: மீட்பு குழுவினர் தகவல்

Mahendran

புதன், 7 பிப்ரவரி 2024 (12:30 IST)
சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைச்சாமி சென்ற கார் ஆற்றில் விழுந்த நிலையில் அவரை தேடும் பணி கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தற்போது அவருடைய செல்போன் கிடைத்துள்ளதாக மீட்பு குழுவினர் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னால் சைதை துரைச்சாமியின் மகன் வெற்றி துரைச்சாமி இமாச்சலப் பிரதேசத்தில் தனது நண்பர்களுடன் காரில் சென்று கொண்டிருந்த போது அந்த கார் திடீரென ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் கார் டிரைவர் உயிரிழந்த நிலையில் அவரது நண்பர்கள் படுகாயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆனால் வெற்றி துரைசாமியை காணவில்லை என்பதால் அவரை தேடும் பணியில் மீட்புக்குழுவினர் கடந்து இரண்டு நாட்கள் ஆக இரவு பகலாக ஈடுபட்டு வருகின்றனர்.
 
இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின் படி வெற்றி துரைசாமியின் செல்போன் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக மீட்பு குழுவினர் தெரிவித்துள்ளனர். மேலும் வெற்றி துரைசாமியை தேடும் பணி தொடர்ந்து வருவதாகவும் விபத்து நடந்த இடத்தில் இருந்து 15 கிலோமீட்டர் சுற்றளவில் தேர்தல் வேட்டை நடைபெற்று வருவதாகவும் மீட்க குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்

Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்