தமிழகத்தில் ரெண்டுதான் கட்சி: மற்றதெல்லாம் சில்லறை! – செல்லூர் ராஜூ

சனி, 25 ஜனவரி 2020 (08:49 IST)
தமிழகத்தில் இரண்டு கட்சிகள் மட்டும்தான் திராவிட கட்சிகள் மற்றவை சில்லறைகள் என அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எம்.ஜி.ஆரின் பிறந்தநாள் பொதுக்கூட்டம் தமிழகமெங்கும் பல்வேறு நகரங்களில் நடத்தப்பட்டு வருகிறது. மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் அமைச்சர் செல்லூர் ராஜூ பங்கேற்றார். அப்போது பேசிய அவர் ”தமிழகத்தில் திராவுட கட்சிகள் என்றால் அது இரண்டுதான். மற்றதெல்லாம் சில்லறைகள்” என்று கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது.

இரண்டு கட்சி எதுவென்று அவர் வெளிப்படையாக கூறினாரா என்பது குறித்து தெரிய வராவிட்டாலும் அவர் அதிமுக மற்றும் திமுகைவைதான் கூறினார் என்று பேசிக் கொள்ளப்படுகிறது. மற்றவையெல்லாம் என்று அவர் குறிப்பிட்டது சிறிய அளவிலான திராவிட கட்சிகளையா அல்லது மற்ற அனைத்து கட்சிகளையுமா என அரசியல் வட்டாரத்தில் கேள்வி எழுதுள்ளது. எனினும் அதிமுகவிலயே திராவிட கட்சி அடையாளத்துடன் தேமுதிக போன்ற கட்சிகள் கூட்டணியில் இருக்கும் நிலையில் அமைச்சர் இப்படி பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்