வெளியானது +2 ரிசல்ட்; கல்லூரி சேர்க்கை எப்போது? – அமைச்சர் பொன்முடி அறிவிப்பு!

திங்கள், 19 ஜூலை 2021 (12:29 IST)
தமிழகத்தில் +2 மாணவர்களுக்கான ரிசல்ட் வெளியான நிலையில் கல்லூரி அட்மிசன் குறித்து அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக +2 மாணவர்களுக்கு தேர்வுகள் நடத்தப்படாத நிலையில் அனைவருக்கும் ஆல்பாஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வில் 8,16 , 473 மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். பள்ளிக்கு வராத 1,656 மாணவர்கள் தேர்வு எழுதாதவர்கள் என கணக்கிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் தேர்ச்சியடைந்த மாணவர்கள் ஜூலை 26 முதல் ஆகஸ்டு 26 வரை கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்கலாம் என உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்