அப்போது திடீரென அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு அனுமதிக்கப்பட்டுள்ளார் என கூறப்படுகிறது.
சோதனையின் முடிவில், அவரது வீட்டில் இருந்து சில முக்கிய ஆவணங்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றி எடுத்துச் சென்றதாகவும், பின்னர் ரவிச்சந்திரனை விசாரணைக்காக அழைத்துச் சென்றதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், விசாரணை நடந்து கொண்டிருக்கும்போதே, திடீரென அவருக்கு நெஞ்சுவலி மற்றும் ரத்த அழுத்தம் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.