காவலரை தூணில் கட்டி வைத்து அடித்த அதிமுக அமைச்சரின் அண்ணன்

Webdunia
வெள்ளி, 13 மே 2016 (13:12 IST)
நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எடப்பாடி பழானிச்சாமியின் அண்ணன் சேலத்தில் காவலர் ஒருவரை கட்டி வைத்து அடித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


 
 
சேலத்தில் அதிமுக அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் வீட்டின் எதிரே பழனிச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் காவலராக பணி புரிந்து வருகிறார். எடப்பாடி பழனிச்சாமியின் வாகனம் இவரது வீட்டின் முன்பு நின்றதால் அதனை தள்ளி நிறுத்துமாறு எடப்பாடி பழனிச்சாமியின் அண்ணன் கோவிந்தனிடன் காவலர் பழனிச்சாமி கூறியுள்ளார்.
 
வாகனத்தை தள்ளி நிறுத்துமாறு சொன்னதல் கோபமடைந்த கோவிந்தன் அந்த காவலரை அமைச்சரின் வீட்டு தூணில் கட்டி வைத்து அடித்துள்ளார். காவலரை அமைச்சரின் அண்ணன் கட்டி வைத்து அடிக்கும் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
அடுத்த கட்டுரையில்