மீண்டும் பள்ளிகள் காலவரையற்ற விடுமுறையா? அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்!

திங்கள், 29 நவம்பர் 2021 (14:58 IST)
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக காலவரையற்ற வகையில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது தான் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இருப்பினும் மழை காரணமாக கடந்த சில நாட்களாக மீண்டும் பள்ளிகள் அவ்வப்போது விடுமுறை அறிவிப்பு வெளியாகி கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்தியாவில் ஒமைக்ரான் என்ற வைரஸ் மிக வேகமாக பரவிம் என்று கூறப்படுவதை அடுத்து மீண்டும் பள்ளி கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை அளிக்க வாய்ப்பு இருப்பதாக நெட்டிசன்கள் வதந்தியை பரப்பி வருகின்றனர்
 
இந்த வதந்தி குறித்து விளக்கமளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் ஒமைக்ரான் வைரஸ் காரணமாக பள்ளிக்கு காலவரையற்ற விடுமுறை என்று வெளியாகும் செய்தியில் உண்மை இல்லை என்று தெரிவித்துள்ளார்
 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்