தமிழ்நாட்டில் மீண்டும் 17 ஆம் தேதி மெகா தடுப்பூசி முகாம்

செவ்வாய், 14 செப்டம்பர் 2021 (11:25 IST)
தமிழகத்தில் மீண்டும் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். 

 
தமிழகத்திலும் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதில் அரசு தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில் கடந்த ஞாயிற்றுகிழமை ஒரே நாளில் தமிழகம் முழுவதும் 40 ஆயிரம் முகாம்கள் அமைத்து 20 லட்சம் தடுப்பூசிகள் போடும் பணி நடைபெற்றது. 
 
இதனைத்தொடர்ந்து தமிழ்நாட்டில் மீண்டும் 17 ஆம் தேதி மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறியுள்ளார். 17 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளதாகவும், 2 நாட்களில் கூடுதல் தடுப்பூசிகள் வரும் என எதிர்பார்ப்பதாகவும் இதன் அடிப்படையில் மீண்டும் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்