ஆன்லைன் வகுப்புகளுக்கு முடிவு! தொடங்கியது மருத்துவ கல்லூரி நேரடி வகுப்புகள்!

Webdunia
திங்கள், 16 ஆகஸ்ட் 2021 (11:37 IST)
தமிழகத்தில் மருத்துவ கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டன.

தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் இது மாணவர்களின் கற்றல் திறனை பாதிக்கும் என்பதால் பள்ளி, கல்லூரிகளை விரைவில் திறக்க அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் இன்று முதல் தமிழகத்தில் உள்ள மருத்துவ கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளை சேர்த்து மொத்தம் 60 கல்லூரிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் தொடங்கியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்