செல்போன் கடைக்குள் புகுந்து கூலாக திருடிய நபர்..சிசிடிவி காட்சி வெளியீடு

வெள்ளி, 18 நவம்பர் 2022 (16:32 IST)
கோவை மாவட்டம் பீளமேடு பகுதியில் ஒரு கடைக்குள் புகுந்த திருடன் கொள்ளையடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவஒ மாவட்டம் பீளமேடு என்ற பகுதியில் செல்போன் கடை  நடத்தி  வருபவர் தினேஷ் பாபு. இந்தக் கடை எப்போது,வாடிக்கையாளர்கள் நிரம்பியே இருக்கும்.

பரபரப்பான இந்தக் கடையில் நேற்றிரவு புகுந்த திருடன், பதற்றமின்றி விளக்குகள் போட்டு,  நேற்றைய வசூலான பணம், புதிய செல்போன் ஆகியவற்றைக் கொள்ளையடித்துச் சென்றார்.

இன்று காலையில், செல்போன் கடையைத் திறக்கும்போது, அதிர்ச்சியடைந்த கடை உரிமையாளர், உள்ளே பணம் மற்றும் செல்போன்கள் திருட்டு போயிருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து, போலீசில் புகாரளித்தார்.

இந்த நிலையில், சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

Edited by Sinoj

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்