சிறப்பாக நடந்தது மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம்.. பக்தர்கள் கூட்டம் அலைமோதல்..!

Mahendran

வியாழன், 8 மே 2025 (10:02 IST)
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் சித்திரை திருவிழா கடந்த மாதம் 29-ஆம் தேதி தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்று, மீனாட்சி அம்மனின் பட்டாபிஷேகம், நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில், மீனாட்சி அம்மனுக்கு மதுரையின் அரசியாக முடிசூட்டப்பட்டது. 
 
பிறகு, அம்மன் போரில் தேவர்களை வென்று, சுந்தரேசுவரருடன் போரிடும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில், பிரகாஷ் பட்டர் மகன் கவுதம் சுந்தரேசுவரர் மற்றும் சிவசேகரன் பட்டர் மகன் சத்தியன் மீனாட்சி அம்மன் வேடத்தில் பிரபலம் பெற்றனர்.
 
நாளின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் இன்று காலை கோலாகலமாக நடைபெற்றது. கோவிலுக்குள் மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் பல்வேறு சீர்வரிசைகள் பெண் வீட்டின் சார்பில் வழங்கப்பட்டன. திருமண மண்டபம், 35 லட்சம் மதிப்பில், வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டது.
 
காலை 4 மணி அளவில், சுந்தரேசுவரரும் மீனாட்சி அம்மனும் வெள்ளி சிம்மாசனத்தில் எழுந்தருளி, சித்திரை வீதிகளில் மாப்பிள்ளை அழைப்பாக வலம் வந்தனர். பிறகு, திருமண மண்டபத்தில் திருக்கல்யாணம், ரிஷப லக்னத்தில், 8.35 முதல் 8.59 மணிக்கிடையில் நடைபெற்றது.
 
இதற்குப் பிறகு, பக்தர்களுக்கு காட்சி அளிக்க மீனாட்சி அம்மன் மற்றும் சுவாமி மணக்கோலத்தில் திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளினர். இரவு 7.30 மணிக்கு, சுந்தரேசுவரர் யானை வாகனத்தில் மற்றும் மீனாட்சி அம்மன் பூப்பல்லக்கில் பவனம் புகுந்து மாசி வீதிகளை வலம் வருவார்கள்.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்