யாருக்கு தைரியம் உள்ளது.. தெரு நாய்கள் விவகாரம்.. தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் சரமாறி கேள்வி

Mahendran

வியாழன், 4 செப்டம்பர் 2025 (15:03 IST)
தெரு நாய்கள் விவகாரம் குறித்து சென்னை உயர் நீதிமன்றம், தமிழக அரசுக்கு முக்கிய கேள்விகளை எழுப்பியுள்ளது. 
 
சென்னை உள்ளிட்ட அனைத்து நகரங்களிலும் தெரு நாய்களின் தொல்லை அதிகரித்து வருகிறது என்று சென்னை உயர்நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. இது குறித்து சென்னை மாநகராட்சி உடனடியாக ஒரு செயல் திட்டத்தை வகுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியது.
 
இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் மட்டும் தமிழ்நாட்டில் சுமார் 2.80 லட்சம் பேர் நாய் கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக, தமிழக அரசு போதுமான கவனம் செலுத்தவில்லை என்றும், இந்த விவகாரத்தில் உயர்மட்ட குழு அமைத்தும் எந்த முன்னேற்றமும் இல்லை என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
 
சென்னை மாநகராட்சியின் அறிக்கையின்படி, 2018ஆம் ஆண்டில் சென்னையில் 57,366 தெரு நாய்கள் இருந்தன. 2024ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, இந்த எண்ணிக்கை 1.81 லட்சமாக உயர்ந்துள்ளது.
 
தெரு நாய்களின் எண்ணிக்கை பெருக்கத்திற்கு முக்கிய காரணம், இனப்பெருக்க கட்டுப்பாடு திட்டங்களில் ஏற்படும் முறைகேடுகளே என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
 
சிறுவர்கள் மற்றும் முதியோர்களை தெரு நாய்கள் தாக்குவதில் இருந்து பாதுகாக்க, அனைத்து துறை அதிகாரிகளும் இணைந்து செயல்பட வேண்டும் என்றும், இதற்கு புதிய செயல் திட்டங்களை வகுக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது. மனிதர்கள் மற்றும் விலங்குகள் என இரண்டு தரப்பினரின் நலன்களையும் பாதுகாக்கும் வகையில் மாநகராட்சி செயல்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்