சவுக்கு சங்கருக்கு எதிராக 13 வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும், மேலும் 24 வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த அறிக்கையை பரிசீலித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி, நிலுவையில் உள்ள 13 வழக்குகளை நான்கு மாதங்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என்றும், நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை ஆறு மாதங்களுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.