மதுபானங்களின் விலை உயர்வு !

புதன், 14 ஜூலை 2021 (21:39 IST)
புதுச்சேரி மாநிலத்தில் மதுபானங்களின் விலை அதிகரிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்திற்கு அருகில் உள்ள யூனியன் பிரதேசங்களில் ஒன்றாகும். இங்கு மற்ற மாநிலங்களை விட அதிகளவில் மொத்தமாக மதுபானங்களைக் கொள்முதல் செய்யலாம்.

அதனால் பல்வேறு மாநிலத்தைச் சேர்ந்தோர் இங்கு வந்து மதுபானங்கள் வாங்கிச் செல்வது அதிகமாகவே இருக்கும்.

இந்நிலையில் கொரொனா  ஊரடங்கு காலத்தில் புதுச்சேரியில் கட்டுப்பாடுகள் இருந்தது. தற்போது கலால்துறை ஆணையம் சுதாகர் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அதில்,. புதுச்சேரியில் அனைத்து வகை மதுபானங்களின் விலையும் நாளை முதல் 20% அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளார். இது மதுபானப் பிரியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்