நடிகைகளை பற்றி ஒருவர் குறிப்பிட்ட கருத்திற்கு எதிராக நடிகையும், தேசிய காங்கிரஸ் செய்தி தொடர்பாளருமான குஷ்பு தனது டிவிட்டர் பக்கத்தில் கொதித்தெழுந்துள்ளார்.
சமீபத்தில் டிவிட்டர் பக்கத்தில் நடிகைகள் பற்றி பேசிய ஒருவர் பணத்துக்காக நடிகைகள் தவறான வழியில் செல்வார்கள் என்கிற ரீதியில் கருத்து தெரிவித்திருந்தார்.
இதைக் கண்டு கோபப்பட்ட குஷ்பு “நடிகைகள் பற்றி இவர் கூறியிருப்பது வருத்தம் அளிக்கிறது. விபச்சார தரகராக இருப்பவர்தான் இப்படி பேச முடியும். இவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும். இவரை போன்ற பிள்ளைகளை பெற்றதற்காக பெற்றோர்கள் வருத்தப்பட வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த விவகாரம் டிவிட்டரில் பரப்பாக விவாதிக்கப்படுகிறது.