தமிழக வெள்ளத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை எவ்வளவு? அமைச்சர் தகவல்!

Webdunia
வெள்ளி, 12 நவம்பர் 2021 (08:30 IST)
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கன மழை மற்றும் வெள்ளம் காரணமாக உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை குறித்து பேரிடர் துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் அவர்கள் தெரிவித்துள்ளார்
 
தமிழகத்தில் கனமழை காரணமாக இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளதாகவும் ஒரு லட்சத்து 45 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார் 
 
மேலும் 150 கால்நடைகள் இறந்துள்ளதாகவும் நூற்றுக்கணக்கான வீடுகள் மற்றும் ஆயிரக்கணக்கான குடிசை வீடுகளுக்கு மழை காரணமாக பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்
 
இந்த நிலையில் மழையால் பாதிக்கப்பட்ட 15 மாவட்டங்களில் 229 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு உள்ளதாகவும் அதில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தங்க வைக்கப்பட்டு உணவு வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்