தமிழகம் மிகைமின் மாநிலம் என்பது மிகப்பெரிய நகைச்சுவை: கருணாநிதி

Webdunia
வியாழன், 16 ஜூன் 2016 (14:03 IST)
15வது சட்டசபையின் முதலாவது கூட்டத்தொடர் ஆளுநர் ரோசய்யா உரையுடன் இன்று தொடங்கியது. 38 பக்கங்கள் கொண்ட அறிக்கையை ஆளுநர் ரோசய்யா வாசித்தார். ஆளுநர் உரைக்கு பின்னர் செய்தியாளார்களை சந்தித்த சட்டப்பேரவை எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் ஆளுநர் உரையை அம்மா கால அட்டவணை என விமர்சித்தார்.



இந்நிலையில், ஆளுநர் ரோசய்யாவின் உரை குறித்து திமுக தலைவர் கருணாநிதி கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழகத்துக்கு வந்துள்ள முதலீடுகள், வேலைவாய்ப்புகள் பற்றி தவறான தகவல்கள் இடம் பெற்றுள்ளன. தமிழகம் மிகைமின் மாநிலமாக மாறிவிட்டது என்று கூறப்பட்டுள்ளது மிகப்பெரிய நகைச்சுவை என்று குறிப்பிட்டுள்ளார்.


வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

 
அடுத்த கட்டுரையில்