சிவகங்கையில் தினகரன் போட்டியிட்டால் அவருக்கு விருந்தோம்பல் செய்வோம்: கார்த்திக் சிதம்பரம்

Siva

வெள்ளி, 8 மார்ச் 2024 (08:22 IST)
சிவகங்கையில் டிடிவி தினகரன் போட்டியிட்டால் அவரை செட்டிநாட்டு வழக்கப்படி மூன்று நாள் மூன்று வார காலம் விருந்தோம்பல் செய்து அதன் பின்னர் அவரை அவரது மன்னார்குடி வீட்டிற்கு வழி அனுப்பி வைப்போம் என காங்கிரஸ் எம்பி கார்த்திக் சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வரும் பாராளுமன்ற தேர்தலில் சிவகங்கை தொகுதியில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பாஜக கூட்டணியின் சார்பில் போட்டியிடும் அவர் தாமரை சின்னத்தில் போட்டியிட வாய்ப்பு இருப்பதாக கூறப்படும் நிலையில் அவர் போட்டியிடுவது குறித்து காங்கிரஸ் எம்பி கார்த்திக் சிதம்பரம் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

சிவகங்கை தொகுதியில் டிடிவி தினகரன் போட்டியிட்டால் செட்டிநாட்டு வழக்கப்படி அவருக்கு மூன்று வார காலம் விருந்தோம்பல் செய்து அதன் பின்னர் அவரை அவரது மன்னார்குடி வீட்டுக்கு அனுப்பி வைப்போம் என்றும் அவர் எனது நல்ல நண்பர் தான் என்றும் தெரிவித்தார். இதற்கு டிடிவி தினகரன் தரப்பில் இருந்து என்ன பதிலடி வரப்போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்