விஜய் எங்கு செல்கிறாரோ, அந்த இடத்திற்கு முன்கூட்டியே அல்லது விஜய் சென்ற அடுத்த நாளோ திமுக சென்று வருவதை பார்க்கும் போது, விஜய்யின் அரசியல் கட்சியை பார்த்து திமுக பயந்து நடுங்குவதாக பத்திரிகையாளர் மணி அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
கோவையில் பூத் கமிட்டி மாநாட்டை விஜய் பிரம்மாண்டமாக நடத்திய நிலையில், அதற்கு அடுத்த நாளே உதயநிதி கோவையில் ரோட் ஷோ நடத்தினார். அதேபோல, வேங்கை வயல் விவகாரத்தை விஜய் கையில் எடுக்க முயற்சித்தபோதுதான், அவசர அவசரமாக இரண்டு ஆண்டுகளாக நிலுவையில் இருந்த வழக்கை சிபிசிஐடி முடித்தது.
அதேபோல, கோவையை அடுத்து மதுரையில் விஜய் பூத் கமிட்டி மாநாடு நடத்த இருப்பதாக தகவல் வெளியான நிலையில், விஜய்க்கு முன்பே திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மதுரை செல்ல இருப்பதாகவும், கட்சியின் இருப்பை காட்டிக் கொள்ள அவர் மதுரைக்கு விஜயம் செய்ய இருப்பதாகவும் பத்திரிகையாளர் மணி தெரிவித்துள்ளார்.