2வது நாளாக ஏற்றத்தில் இந்திய பங்குச்சந்தை.. முதலீட்டாளர்கள் தொடர் மகிழ்ச்சி..!

Siva

செவ்வாய், 22 ஜூலை 2025 (09:45 IST)
இந்திய பங்குச்சந்தை, நேற்று வாரத்தின் முதல் நாள் ஏற்றத்துடன் வர்த்தகமான நிலையில், இன்று இரண்டாவது நாளாகவும் ஏற்றத்தில் வர்த்தகமாகி வருவது முதலீட்டாளர்களுக்கு தொடர் மகிழ்ச்சியை அளித்துள்ளது.
 
இன்று காலை பங்குச்சந்தை வர்த்தகம் தொடங்கியதும், மும்பை பங்கு சந்தை குறியீடான சென்செக்ஸ் 113புள்ளிகள் உயர்ந்து 82333 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதேபோல், தேசிய பங்குச்சந்தைக் குறியீடான நிஃப்டி 17 புள்ளிகள் உயர்ந்து 25110 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
 
இன்றைய பங்குச் சந்தையில், அப்போலோ ஹாஸ்பிடல், ஹெச்.சி.எல். டெக்னாலஜிஸ், ஹெச்.டி.எஃப்.சி. வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, எல் அண்ட் டி, டாடா ஸ்டீல், டி.சி.எஸ்., டெக் மஹிந்திரா, டைட்டன் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாகி வருகின்றன.
 
அதே சமயம், ஏசியன் பெயிண்ட்ஸ், பஜாஜ் ஃபைனான்ஸ், சிப்லா, ஹீரோ மோட்டார்ஸ், ஹிந்துஸ்தான் யூனிலீவர், இன்போசிஸ், ஐ.டி.சி., ஜியோ ஃபைனான்சியல் மாருதி சுசுகி, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, ஸ்ரீராம் ஃபைனான்ஸ், சன் பார்மா, டாடா மோட்டார்ஸ் உள்ளிட்ட பங்குகளின் விலை குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்