வருமான வரி ரெய்டு - சட்டப்படி எதிர்கொள்ள தயார்- விஜய்பாஸ்கர்

திங்கள், 18 அக்டோபர் 2021 (23:12 IST)
அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் சகோதரர் வீட்டில் இன்று வரித்துறையினர் சோதனை நடத்தினர். நிலையில் இதுகுறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டியளித்துள்ளார்.

திருச்சி எடமலைப்பாடி புதூரில் உள்ள முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் சகோதர் உதயகுமார் வீட்டில் இன்று வருமான வரித்துறையின் சோதனை நடத்தினர். இதில் 1 கிலோ தங்கம்  பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே ரூ.1,06,000 பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. இது அதிமுகவினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில்,  முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் இந்த ரெய்டு குறித்து பேட்டியளித்துள்ளார்.

அதில், வருமான வரிசோதனையை சட்டப்படி எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன்.  எனக்கு ஆதரவளித்த இபிஎஸ், ஓபிஎஸ் மற்றும் அதிமுக தொண்டர்களுக்கு நன்றி எனத் தெரிவித்துள்ளார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்