முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மீது வழக்குப்பதிவு

வியாழன், 16 செப்டம்பர் 2021 (10:04 IST)
அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குபதிவு.

 
கடந்த அதிமுக ஆட்சியில் ஜோலார்பேட்டை தொகுதி எம்.எல்.ஏவாக இருந்தவர் கே.சி.வீரமணி. அவர் அமைச்சராக இருந்த போது வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த புகாரில் சோதனை நடைபெற்று வருகிறது. சென்னை,வேலூர், திருவண்ணாமலை உள்பட அவருக்கு சொந்தமான 20 இடங்களில் சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
 
இந்நிலையில் அவருக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற சோதனையில் அவர் வருமானத்திற்கும் மேல் 654% சொத்து சேர்த்திருப்பதாக லஞ்ச ஒழிப்புத் துறை முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 
 
இதனிடையே அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குபதிவு செய்துள்ளனர். கடந்த 5 ஆண்டுகளில் வருமானத்துக்கு அதிகமாக ரூ.28.78 கோடிக்கு 654% அளவுக்கு சொத்து குவித்ததாக வழ்க்குபதிவு செய்யப்பட்டுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்