வேறொருவருடன் டூவீலரில் சென்ற மனைவி.. காரை விட்டு மோதிய கணவனால் பரபரப்பு..!

வெள்ளி, 1 டிசம்பர் 2023 (07:30 IST)
பிரிந்து வாழும் மனைவி வேறொருடன் டூவீலரில் சென்றதை பார்த்த கணவர் தனது காரால் அந்த டூவீலரை மோதிய சம்பவம் திண்டுக்கல் அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திண்டுக்கல் சாலைப்புதூர் என்ற பகுதியை சேர்ந்த பிரதீப் குமார் மற்றும் அவரது மனைவி நந்தினி ஆகிய இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில மாதமாக பிரிந்து வாழ்கின்றனர்.

இந்த நிலையில் தனது பணியை முடித்துவிட்டு தனது சக ஊழியர் அசோக் குமாருடன் நந்தினி அவருடைய பைக்கில் வீடு திரும்பி கொண்டு இருந்தார். அதை அந்த வழியாக சென்ற பிரதீப் குமார் பார்த்து ஆத்திரம் அடைந்தார்.

இதையடுத்து தனது காரால் அந்த டூவீலர் மீது மோதியதோடு, கீழே விழுந்து காயம் அடைந்த மனைவி நந்தினியை மட்டும் காரில் தூக்கி போட்டுக் கொண்டு காரை எடுத்துக் கொண்டு வேகமாக சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. படுகாயம் அடைந்த அசோக் குமாரை அந்த பகுதியில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
 
இந்த நிலையில் நந்தினியை கடத்திக் கொண்ட சென்ற பிரதீப் குமாரை துப்புச்சம்பட்டி என்ற பகுதியில் பொதுமக்கள்  மடக்கி பிடித்து போலீசிடம் ஒப்படைத்தனர். அவர் மீது தற்போது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்