அரியலூர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித் துறையில், 1997 ஆம் ஆண்டு கணிப்பொறி உதவியாளராக தின கூலி அடிப்படையில் நியமிக்கப்பட்டவர் சத்தியா. இவர் பணி வரைமுறை செய்ய வேண்டும் என ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், மனுதாரருடைய கோரிக்கையை பரிசீலிக்க வேண்டும் என்றும் 12 வாரங்களில் முடிவெடுக்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. அந்த உத்தரவு அடிப்படையில் ஊரக வளர்ச்சித் துறை தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு வழக்கு தொடரப்பட்டது.
அந்த அறிக்கையில், தற்காலிக பணியாளர்கள் நியமனத்தை கைவிட வேண்டும் என 2020 ஆம் ஆண்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதை பதிவு செய்த நீதிபதிகள், 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்திற்கு பிறகு பணியில் சேர்ந்த அனைத்து தற்காலிக ஊழியர்களும் பணியில் இருந்து விடுவிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.