இன்று, முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதன் பின்னர், அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, "தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் மக்களவைத் தொகுதிகளை குறைக்க மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. இதன் விளைவாக, தமிழகம் 8 தொகுதிகளை இழக்க நேரிடும். மொத்தம் 31 மக்களவைத் தொகுதிகள் மட்டுமே இருக்கும். இதை எதிர்த்து அனைத்து அரசியல் கட்சிகளும் குரல் கொடுக்க வேண்டும்," என அவர் தெரிவித்தார்.
மும்மொழிக் கொள்கை, நீட் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளில் தமிழகத்திற்கு அதிக அளவிலான மக்களவை உறுப்பினர்கள் தேவை. "தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் தென்னிந்தியாவில் தலைக்கு மேல் கத்தி தொங்குகிறது," என முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.